திருச்சி

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சைக்கிள் கடைக்காரருக்கு 7 ஆண்டுகள் சிறை

DIN

திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சைக்கிள் கடைக்காரருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
திருச்சி பாலக்கரை கூனிபஜார் கோரி மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் அப்பாஸ் என்ற முகம்மது இலியாஸ் (43). இவர், அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை 
கொடுத்ததாக அவரது தாயார் கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில்  போலீஸார் கடந்த 20.2.2018 -இல் வழக்குப்பதிவு செய்து அப்பாஸை கைது செய்தனர்.
 இவ்வழக்கு திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு சார்பில் வழக்குரைஞர் ஆர்.வெங்கடேசன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.மகிழேந்தி அப்பாஸுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 
அபராதத் தொகையை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT