திருச்சி

துறையூர், கோட்டாத்தூரில் குடிநீர் கேட்டு சாலை மறியல்

DIN

துறையூர் நகர், கோட்டாத்தூர் கிராமம் ஆகிய இடங்களில், குடிநீர் வழங்கக் கோரி திங்கள்கிழமை அப்பகுதியினர் சாலை மறியல் போராட்டம் செய்தனர். 
துறையூர் 4 ஆவது வார்டு வடக்குத் தெரு மக்கள் 10 நாட்களாக தண்ணீர் விநியோகிக்கவில்லை என திங்கள்கிழமை காலை 8 மணியளவில் சாலை மறியல் செய்தனர். தகவலறிந்து அங்கு வந்த துறையூர் காவல் ஆய்வாளர் குருநாதன், நகராட்சி உதவி பொறியாளர் ஜெயமாலதி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை மேற்கொண்டதில் அவர்கள் கலைந்து சென்றனர்.  
கோட்டாத்தூரிலும் 15 நாள்களாக குடிநீர் வழங்கவில்லை என்று கிராம மக்கள் 3 மணிநேரம் காலிக்குடங்களுடன் சாலை மறியல் செய்தனர். தகவலறிந்த துறையூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேசினர். இதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT