திருச்சி

திருவானைக்காவில் இன்று ஆடிப்பூரத் தெப்போற்ஸவம்

DIN

திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேசுவரி அம்மன் உடனுறை சம்புகேசுவரர் திருக்கோயில் ஆடிப்பூரத் தெப்போற்ஸவம் திங்கள்கிழமை (ஆக.5) நடைபெறுகிறது.
கடந்த மாதம் 25 ஆம் தேதி தொடங்கிய திருவிழாவில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி,  நான்காம் பிரகாரம் வலம் வந்து காட்சியளித்தார்.  11-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை  இரவு வெள்ளி திருமஞ்சத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
தெப்போற்ஸவத்தையொட்டி, திங்கள்கிழமை மாலை கருவறையிலிருந்து சுவாமி, அம்மன்  சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடாகி, தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி  மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.  இதற்கான ஏற்பாடுகளைத் திருக்கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

துளிகள்...

SCROLL FOR NEXT