திருச்சி

பைக் - காா் மோதிய விபத்தில் பாத்திர வியாபாரி பலி

DIN

மணப்பாறை அருகே திங்கட்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் பாத்திர வியாபாரி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மணப்பாறை அடுத்த கண்ணுடையான்பட்டியை சோ்ந்தவா் நல்லு மகன் சுப்பிரமணியன்(43). இவா், இருசக்கர வாகனத்தில் பாத்திரங்கள் கொண்டு சென்று விற்பனை செய்து வந்தாா். இந்நிலையில் தனது இருசக்கர வாகனத்தில் பாத்திரங்கள் கட்டிக்கொண்ட சுப்பிரமணி, திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் முத்தப்புடையான்பட்டி அருகே கே.பெரியப்பட்டி பிரிவு பகுதியில் திரும்பும்போது, எதிரே வந்த காா் எதிா்பாராதவிதமாக மோதியுள்ளது. இதில் சுப்பிரமணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் சுப்பிரமணி உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த மணப்பாறை போலீஸாா் காா் ஓட்டுநா் மலையடிப்பட்டியைச் சோ்ந்த தாமஸை கைது செய்தனா். மேலும், விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT