திருச்சி

ஸ்ரீரங்கத்திற்குள் செல்லும் வாகனங்களுக்கு ஏப்.1 முதல் நுழைவுக் கட்டணம் ரத்து

DIN

ஸ்ரீரங்கம் பகுதிக்குள் நுழையும் வாகனங்களுக்கான நுழைவுக்கட்டணம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படவுள்ளது.
இது குறித்து மாநகராட்சி தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஸ்ரீரங்கத்திற்குள் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஒப்பந்தம் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நுழைவுக்கட்டணம் வசூலிப்பதை தடைசெய்யக்கோரி ஏற்கெனவே பல்வேறு தரப்பினர் வேண்டுகோள் விடுத்தனர். 
இதனை பரிசீலித்த மாநகராட்சி நிர்வாகம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நுழைவுக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT