முகப்பு
திருச்சி

பிப்ரவரி 15-இல் வேலைவாய்ப்பு  முகாம்

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப்.15) நடைபெறுகிறது.

Updated On : 13 பிப்ரவரி 2019, 9:39 am IST
பகிர்:

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப்.15) நடைபெறுகிறது.
இந்த முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள்  பங்கேற்று  தங்களது நிறுவனத்துக்கு பல்வேறு நிலைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தகுதியான ஆள்களை தேர்வு செய்யவுள்ளன. எஸ்எஸ்எல்சி , பிளஸ் 2, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, ஐடிஐ கல்வித்தகுதி உடையவர்கள்  தங்கள் கல்வி, மதிப்பெண் சான்றிதழ்கள், ஆதார் அட்டை  ஆகியவற்றின்  நகல்கள் மற்றும் 2 புகைப்படங்களுடன் முகாமில் பங்கேற்கலாம்.
முகாமின் மூலம் வேலைவாய்ப்பைப் பெறுவோரது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ஏதும் ரத்து செய்யப்படமாட்டாது.  வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் தனியார் நிறுவனங்கள் தங்களது தேவை குறித்த விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரிலோ,அஞ்சல்  மூலமாகவோ தெரிவிக்கலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.