திருச்சி

மணல் லாரி மோதி கட்டடத் தொழிலாளி சாவு

DIN

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் நடராஜபுரம் கச்சேந்தி மலைப் பகுதியை சேர்ந்தவர்ராஜேந்திரன்(48). கட்டடத் தொழிலாளியான இவர் வியாழக்கிழமை காலை  கூத்தைப்பார் அரசங்குடி சாலைப்பகுதியில்,  இயற்கை உபாதைக்கு ஒதுங்கினார். 
அப்போது, அரசங்குடி பகுதியில் இருந்து மணல் ஏற்றி வந்த மினிலாரி  ராஜேந்திரன் மீது மோதி விட்டு, நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆன்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைக்கு பலனில்லாமல் ராஜேந்திரன் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருவெறும்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

SCROLL FOR NEXT