திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தேமுதிகவின் மாவட்ட செயலர் பி.எல். கிருஷ்ணகோபால் தலைமையில் சட்டப்பேரவைத் தொகுதிக்கான சார்பு அணி நிர்வாகிகளுக்கான விருப்ப மனு பெறுதல் மற்றும் நேர்முக தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநில பொறுப்பாளர்களான கேப்டன் மன்ற செயலர் செல்வ அன்புராஜ், துணை செயலர்கள் பி. ராஜா சந்திரசேகர், கே.ஏ.சுல்தான் உள்ளிட்டோர் நேர்முக தேர்வுகளை நடத்தினர். நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர் வசந்த் பெரியசாமி, நகர செயலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.