திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 26.78 லட்சம் கரன்சி,  தங்க நகைகள் பறிமுதல்

DIN

திருச்சி விமான நிலையத்தில்ரூ. 26. 78 லட்சம் மதிப்புள்ள கரன்சிகள் மற்றும்,  தங்க நகைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
திருச்சி விமான நிலையத்தில் மலேசியா தலைநகர் கோலாலம்பூர் செல்லும் விமானம் செவ்வாய்க்கிழமை இரவு தயாராக நின்றிருந்தது. அதில் பயணிக்க காத்திருந்த பயணிகளிடம் சுங்கத் துறையினர்  மேற்கொண்ட சோதனையில் அனுசியா (39) என்ற பெண் பயணி வைத்திருந்த ரூ.  4.50 லட்சம் மதிப்பிலான இந்திய பணத்தாள்கள், மற்றும் 17,400 மலேசியன் ரிங்கிட் என மொத்தம் 
ரூ. 7. 51 லட்சம் மதிப்பிலான கரன்சி,  அதைப்போல, ரம்யா (26) என்ற பயணி வைத்திருந்த ரூ. 1.60 லட்சம் இந்திய கரன்சிகள் மற்றும் 20,000 மலேசியன் ரிங்கிட் என மொத்தம் ரூ. 5.06 லட்சம் மதிப்பிலான கரன்சி, குருநாதன் என்ற பயணி வைத்திருந்த ரூ. 1.72 லட்சம் இந்திய கரன்சி 15,000 மலேசியன் ரிங்கிட் என் மொத்தம் ரூ. 4.31 லட்சம் மதிப்பிலான கரன்சி, மேலும் ஒரு பயணி ரூ. 4.97 லட்சம், 
மற்றொரு பயணி 2.29 லட்சம் என மொத்தம் ரூ. 24.16 லட்சம் மதிப்பிலான கரன்சி,  முகமது பாரூக் என்ற பயணியிடம் ரூ.  2.62 லட்சம் மதிப்பிலான 81 கிராம் தங்க நகை  (மொத்தம் 26.78 லட்சம்) ஆகியவற்றை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT