திருச்சி

வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகை திருட்டு

மருங்காபுரி அருகே  முதியவர் வீட்டின் பூட்டை உடைத்து, 21 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

DIN

மருங்காபுரி அருகே  முதியவர் வீட்டின் பூட்டை உடைத்து, 21 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
மருங்காபுரி ஒன்றியம், சங்கம்பட்டியைச் சேர்ந்தவர் நா.வேலுச்சாமி (62).  நூறு நாள் வேலை திட்டப் பணியாளரான இவர், செவ்வாய்க்கிழமை வழக்கம் போல வேலைக்குச் சென்றுவிட்டார்.
மாலையில் வேலுச்சாமி வீடு திரும்பிய போது கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பையில் வைத்திருந்த 21 பவுன் நகைகளும் திருட்டு போயிருப்பதுதெரிய வந்தது. 
இதுகுறித்து துவரங்குறிச்சிகாவல் நிலையத்தில் வேலுச்சாமி புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து நகையைத் திருடிச் சென்ற நபர்களைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT