திருச்சி

தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் பலி

DIN

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் புதன்கிழமை உயிரிழந்தது. 
தொட்டியம் வட்டம் அலகரை ஊராட்சிக்குட்பட்ட கல்லுப்பட்டி கிராமத்தில் தண்ணீர்  தேடி வனப்பகுதியில்  இருந்து வந்த புள்ளிமான் சாலையோரப் பள்ளத்தில் விழுந்து காயமடைந்து கிடந்தது. 
இதைக்  கண்ட  அப்பகுதி மக்கள் வருவாய் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 
இதையடுத்து அலகரை விஏஓ  கலைவாணி மற்றும் வனத் துறையினர் அந்தப் புள்ளிமானை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டபோது சிகிச்சை பலனின்றி அந்த மான் இறந்தது.  
இதையடுத்து கால்நடை மருத்துவர் உதவியுடன் பிரேதப் பரிசோதனை செய்து தும்பலம் வனப்பகுதியில் புதைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

SCROLL FOR NEXT