திருச்சி

சாலை மையத்தடுப்புச் சுவரில் மோதி கூலித்தொழிலாளி பலி

DIN

திருச்சி அரியமங்கலம் அருகே சாலை மையத்தடுப்புச் சுவரில் இரு சக்கர வாகனம் மோதியதில், கூலித்தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
அரியமங்கலம் உக்கடை பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி நாகூர்கனி (41). செவ்வாய்க்கிழமை காலை இவரும், இவரது மனைவி ஷகிலாபானுவும் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.
தஞ்சாவூர் சாலையில் அமலோற்பவம் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையின் மையத்தடுப்புச் சுவர் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த நாகூர்கனி, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
திருச்சி தெற்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவில் ஷகிலாபானு அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT