திருச்சி

ஜூன்15-இல் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

DIN

திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூன் 15 ஆம் தேதி சமையல் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற இருப்பதாக ஆட்சியர் சு.சிவராசு புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:  மாவட்ட வருவாய் அலுவலர் த.சாந்தி தலைமையில் திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் ஜூன் 15 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், திருவெறும்பூர் வட்டாரத்துக்கு உள்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். எனவே, திருவெறும்பூர் வட்டாரத்துக்கு உள்பட்ட நுகர்வோர்கள்,அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள்,பொதுமக்கள் கலந்து கொண்டு எரிவாயு உருளை விநியோகம் தொடர்பான குறைபாடுகளை மனுக்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

SCROLL FOR NEXT