திருச்சி

ரூ. 8.76 கோடியில் காசோலைகள், புரோநோட்டுகள் பறிமுதல்

DIN

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திருச்சியில்  பறக்கும்படையினர் வெள்ளிக்கிழமை நடத்திய  வாகனச் சோதனையில் ரூ. 8,76,80,000 மதிப்பிலான காசோலைகள், புரோநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
திருச்சி அருகே திருப்பராய்த்துறை சுங்கச்சாவடியில் நில எடுப்பு தனி வட்டாட்சியர் எம். சுமதி தலைமையில் பறக்கும்படை அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் 192 காசோலைகளில் கையெழுத்துப் போடப்பட்ட 
ரூ. 8,75,60,000 மதிப்பிலான காசோலைகள் ,ரூ. 1.20 லட்சம் மதிப்பில் இரு புரோநோட்டுகளை கைப்பற்றினர்.
விசாரணையில் வாகனத்தில் இருந்தோர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பரமசிவம் மகன் கண்ணன் (29), ராமச்சந்திரன் மகன் மணி (28)மாயாண்டி மகன் பேச்சிமுத்து (20) ஆகியோர் எனத் தெரிய வந்தது. 
இவர்கள் உரிய ஆவணங்களைக் காண்பிக்காததால் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் கனகமாணிக்கத்திடம் பறக்கும்படை அதிகாரிகள் காசோலைகளை, 
புரோநோட்டுக்களை ஒப்படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

மழைச் சாரலிலும் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

SCROLL FOR NEXT