திருச்சி

பெண்ணிடம் ரூ.1.11 கோடி நிலம் மோசடி

DIN


பெண்ணிடம் ரூ. 1.11 கோடி நிலமோசடி செய்த 4 பேர் மீது குற்றப்பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
சென்னை குளத்தூரைச் சேர்ந்தவர் பிரேமா நாயகம் மகள் ஐஸ்வர்யாலட்சுமி(33). இவர்,திருச்சியில் உள்ள தனக்கு சொந்தமான 21,300 சதுர அடி நிலத்தை மதுரையைச் சேர்ந்த சுந்தரவடிவேல் பெயரில் கிரையம் செய்துள்ளார். அவர், தனது நண்பர்கள் சாய்சங்கர், குத்புதீன், சாவ்டி ஆகியோருடன் சேர்ந்து போலி ஆவணங்கள் தயார் செய்து பலரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு நிலத்தை விற்பனை செய்துள்ளார்.இதுகுறித்து ஐஸ்வர்யாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மாநகர குற்றப்பிரிவு போலீஸார் சுந்தரவடிவேல் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT