திருச்சி

மகனைக் கத்தியால் குத்திய தந்தை கைது

DIN

ஸ்ரீரங்கம் வடக்குவாசல் பகுதியில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில், மகனைக் கத்தியால் குத்திய தந்தை கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீரங்கம் வடக்குவாசல், கொள்ளிடக்கரைப் பகுதியில் வசித்து வருபவர் கொத்தனார் மகேந்திரன் (52).  இவரது மகன் பிரசன்னா (17).
வேலைக்குச் செல்லாமல் ஊர்ச் சுற்றி வந்த பிரசன்னா, வீட்டுக்கு வரும் போது மது அருந்தி வருவாராம்.  திங்கள்கிழமை இரவும் மதுபோதையில் இருந்த பிரசன்னாவை அவரது தந்தை மகேந்திரன் கண்டித்தாராம். அப்போது,  தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் தந்தையை பிரசன்னா குத்த முயன்றார். 
ஆனால், மகேந்திரன் அக்கத்தியை பிடுங்கி மகன் கழுத்தில் குத்தினாராம். இதில் பலத்த காயமடைந்த பிரசன்னா ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்த ஸ்ரீரங்கம் போலீஸார் மகேந்திரனைகைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT