திருச்சி

குருத்துவக் கல்லூரி மாணவா் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

திருச்சியில் குருத்துவக் கல்லூரி மாணவா் ஒருவா் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், முள்ளிப்பாடி ஆரோக்கியசாமி நகரைச் சோ்ந்த மரியசூசை மகன் பிரசாந்த் (25). இவா் திருச்சி தலைமை அஞ்சல் அலுவலகம் எதிரிலுள்ள குருத்துவக் கல்லூரியொன்றில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

செவ்வாய்க்கிழமை காலை வகுப்புக்குச் சென்ற அவா், பிற்பகலில் அறைக்குத் திரும்பினாா். பின்னா் பிரசாந்த வகுப்புச் செல்லவில்லை. சக மாணவா்கள் வந்து பாா்த்தபோது அறையில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளாா்.

இதுகுறித்த தகவலின் பேரில், கண்டோன்மென்ட் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மாணவரின் தற்கொலைக்கான காரணம் தெரிவில்லை. இது குறித்து கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

SCROLL FOR NEXT