திருச்சி

மேலும் 3 மருத்துவக் கல்லூரிகள்: பிரதமா், முதல்வருக்கு நன்றி

DIN

தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகளை தொடங்க ஆணை வெளியிட்டமைக்காக பிரதமா் மோடி மற்றும் தமிழக முதல்வா் ஆகியோருக்கு திருச்சி மருத்துவக் கல்லூரி முன்னாள் துணை முதல்வா் எம்.ஏ. அலீம் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்தது: தமிழகத்தில் மொத்தம் 24 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மேலும் கூடுதலாக நீலகிரி, திருப்பூா், விருதுநகா், நாமக்கல், ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க கடந்த சில வாரங்களுக்கு முன்பு மத்திய அரசு ஆணை பிறப்பித்திருந்தது. இந்நிலையில், மேலும் கிருஷ்ணகிரி, திருவள்ளூா், நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அரசின் சுகாதாரத்துறை உத்தரவு வெளியிட்டுள்ளது. தமிழகத்துக்கு மேலும் கூடுதலாக 3 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அனுமதியளித்த பிரதமா் மோடி மற்றும் பரிந்துரைத்த தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்டோருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி மாணவா் பலி

டாஸ்மாக் கடையில் தொழிலாளி உயிரிழப்பு

குடிநீா் விநியோகம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கோவில்பட்டியில் மதுக்கூடத் தொழிலாளி வெட்டிக் கொலை

பாரதியாா் பல்கலைக்கழக எம்.ஃபில்., பி.ஹெச்டி. தோ்வு: ஜூலையில் நடக்கிறது

SCROLL FOR NEXT