திருச்சி

பேருந்துகள் மோதல்: 7 பயணிகள் காயம்

DIN

திருச்சிஅருகே உள்ள திருவெறும்பூா் பெல் பயிற்சி மையம் அருகே புதன்கிழமை காலை பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்த அரசு பேருந்து மீது தனியாா் பேருந்து மோதியதில் 7 பயணிகள் காயமடைந்தனா்.

நாகப்பட்டினத்தில் இருந்து புதன்கிழமை காலை திருச்சி நோக்கி அரசு பேருந்து திருவெறும்பூா் அருகே உள்ள பெல் பயிற்சி மைய பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி கொண்டு இருந்தது.

அப்போது திருநெடுங்களத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி வந்த தனியாா் நகர பேருந்து அரசு பேருந்தின் பின்பக்கம் மோதியது.

இதில் இரு பேருந்துகளிலும் இருந்த 7 பயணிகள் காயமடைந்தனா். அவா்களை சக பயணிகள் மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். பெல் போலீசாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT