திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப்.13) நடைபெறுகிறது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார், பொதுத்துறை நிறுவனத்தினர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வருகை தந்து, தங்களது நிறுவனத்துக்கு பல்வேறு நிலைகளில் தகுதியான ஆள்களை தேர்வு செய்யவுள்ளனர்.
10ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ கல்வித்தகுதி உடையவர்கள் பங்கேற்கலாம். பங்கேற்கும் நபர்கள் தங்களது கல்விச்சான்று, மதிப்பெண் சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் 2 புகைப்படத்துடன் வர வேண்டும்.
இந்த முகாம் மூலம் வேலைவாய்ப்பு பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எதுவும் ரத்து செய்யப்படமாட்டாது. அவர்களது பதிவு மூப்பு விவரங்களும் அப்படியே தொடரும்.
இந்தப் பணி முற்றிலும் இலவசமானது என மாவட்ட வேலைவாயப்பு அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.