திருச்சி

இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

DIN

திருச்சி மாவட்டம், முசிறி அருகே இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை முசிறி போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.
முசிறி அருகேயுள்ள சேருகுடி கிராமத்தைச் சேர்ந்த கி. இளையராஜா (33) என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப். 8)  சூரம்பட்டி அரைவை ஆலை அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் மதுபானம் குடித்துக் கொண்டிருந்த சூரம்பட்டி சேர்ந்தவர்களான செ.கிரிதரன் (23) மூ. தனபால், த. மதிவாணன் ஆகியோர் இளையராஜாவிடம் தகராறு செய்து இரும்புக் கம்பி மற்றும் கல்லால் அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது. 
இதையடுத்து, இளையராஜா முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதைத்தொடர்ந்து, முசிறி காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி   செ.கிரிதரன் (23), மூ. தனபால், த. மதிவாணன் ஆகியோர் மீது வழக்கு பதிந்து கிரிதரனைக் கைது செய்தனர். மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT