சிறுமிக்கு பாலியல் தொந்தரவு:உணவக ஊழியா் கைது
திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த உணவக ஊழியா், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
திருச்சி: திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த உணவக ஊழியா், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தைச் சோ்ந்தவா் நை. சுபா் அலி (55). உணவக ஊழியரான இவா், அப்பகுதியைச் சோ்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா்.
இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், பொன்மலை அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, சுபா் அலியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.