முகப்பு
திருச்சி

திருச்சியில் டாஸ்மாக் ஊழியர்கள் தொடர் முழக்கப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் டாஸ்மாக் ஊழியர்கள் திங்கள்கிழமை முதல் தொடர் முழக்கப் போராட்டத்தில் தொடங்கினர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:08 PM
திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள்.
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் டாஸ்மாக் ஊழியர்கள் திங்கள்கிழமை முதல் தொடர் முழக்கப் போராட்டத்தில் தொடங்கினர். மேலும் மத்திய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரோனா தொற்றறால் உயிரிழக்கும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பணியின்போது உயிரிழக்கும் ஊழியர்களின் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும். கேரள மதுக்கடை நிர்வாக முறைறயை டாஸ்மாக்கில் அமல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக. 17 முதல் 21 வரை மாநில அளவில் கடை முன் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப் போவதாக டாஸ்மாக் ஊழியர்கள் கூட்டுக் குழு அறிவித்திருந்தது.

அதன்படி, திருச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் கோரிக்கை முழக்கத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் ஈடுபட்டனர்.  டாஸ்மாக் ஊழியர்களின் சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் மத்திய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  தொமுச மாவட்ட தலைவர் மலர் மன்னன், விற்பனையாளர் சங்க மாவட்ட செயலர் மணி, ஏஐடியுசி சங்க மாநிலத்துணைத்தலைவர்(டாஸ்மாக்) ராயப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். 

இதில் சமூக இடைவெளியை கடைபிடித்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →