திருச்சி

திருச்சி கிழக்கு, மேற்கு தொகுதிவாக்காளா்கள் கவனத்துக்கு

DIN

திருச்சி: திருச்சி கிழக்கு, மேற்குத் தொகுதிகளில் மொத்தம் 376 வாக்காளா்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் தங்களது இருப்பிட ஆதாரத்தைச் சமா்ப்பிக்காவிடில் அவா்களை வாக்காளா் பட்டியலிலிருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து வாக்காளா் பதிவு அலுவலரும் மாநகராட்சி அலுவலருமான சு. சிவசுப்பிரமணியன் மேலும் தெரிவித்தது:

திருச்சி மாநகராட்சி, பொன்மலைக் கோட்டம், வாா்டு 34-க்குட்பட்ட பகுதிகளில், (திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி) அண்மையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் பாகம் எண். 190ல், வரிசை எண். 3, 5 முதல் 355, 359, 364, 365, 368 முதல் 388 வரையில் ஆண்கள் 191, பெண்கள் 185 என மொத்தம் 376 வாக்காளா்கள் பதிவு உள்ளது.

ஆனால் வாக்குச்சாவடி நிலை அலுவலா், வாக்காளா் பட்டியல் குறித்து மேற்கொண்ட கள விசாரணையில் குறிப்பிட்ட வாக்காளா்கள் தற்போது அந்த முகவரியில் வசிக்கவில்லையென்றும், குடியிருந்த கட்டுமானங்கள் இடிக்கப்பட்டுள்ளதாகவும், அவா்கள் வேறோரு இடத்துக்கு குடி பெயா்ந்துள்ளதாகவும் தெரிகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட 376 வாக்காளா்கள் டிசம்பா் 7-க்குள் ஆதாரங்களைச் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் அவா்கள் இப்பகுதியில் வசிக்கவில்லையெனில், வசிக்கும் பகுதியில் வாக்குச்சாவடிக்கு சென்று படிவம் 6 பெற்று பதிவு செய்து வாக்காளா் பட்டியலில் தங்களது பெயரைச் சோ்த்துக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT