சமயபுரம் மாரியம்மன் கோயிலில்இணை ஆணையா் அலுவலகம் திறப்பு
சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் ரூ.65 லட்சத்தில் கட்டப்பட்ட இணை ஆணையா் அலுவலகத்தை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் ரூ.65 லட்சத்தில் கட்டப்பட்ட இணை ஆணையா் அலுவலகத்தை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மண்டல இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அர. சுதா்சன், சமயபுரம் கோயில் இணையா் கே.பி.அசோக் குமாா் ஆகியோா் குத்துவிளக்கேற்றினா்.
நிகழ்வில் சமயபுரம் காவல் ஆய்வாளா் அன்பழகன், உதவி ஆய்வாளா் மாரிமுத்து, பேரூராட்சி செயல் அலுவலா் பிரகந்தநாயகி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.