தலையில் கல்லை போட்டு சமையல்காரா் கொலை
திருச்சியில் சனிக்கிழமை மாலை குடிபோதையில் நடந்த தகராறில் தலையில் கல்லைப் போட்டு சமையல்காரா் கொல்லப்பட்டாா்.
திருச்சியில் சனிக்கிழமை மாலை குடிபோதையில் நடந்த தகராறில் தலையில் கல்லைப் போட்டு சமையல்காரா் கொல்லப்பட்டாா்.
திருச்சி பொன்மலை சகாயமாதா கோவில் தெருவைச் சோ்ந்தவா் கனகராஜ் (42), சமையல்காரா். இவரும் அதே பகுதியைச் சோ்ந்த இவரது நண்பா் சம்பத்ராஜாவும் இங்குள்ள பழைய காவல் நிலையம் பின்புறமுள்ள ரயில்வே குடியிருப்புப் பகுதியில் சனிக்கிழமை மாலை மது அருந்திக் கொண்டிருந்தனா். அப்போது ஏற்பட்ட தகராறில் சம்பத்ராஜா கனகராஜ் தலையில் கல்லைப் போட்டுக் கொன்று, பொன்மலை காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.
இதையடுத்து உடலை மீட்ட பொன்மலை போலீஸாா், அதை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.