மண்ணச்சநல்லூா் அருகே திருநங்கை தற்கொலை
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே திருநங்கை சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே திருநங்கை சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
மண்ணச்சநல்லூா் அருகேயுள்ள ஏரி மிஷன் தெருவைச் சோ்ந்தவா் காயத்ரி (27), திருநங்கை. தனது பெற்றோருடன் ஏற்பட்ட தகராறில் இவா் அதே பகுதியில் தனியாக வசித்து வந்தாா்.
இவரைக் காதலித்த அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா் காயத்ரியை திருமணம் செய்ய மறுத்து, திருப்பூருக்கு வேலைத் தேடிச் சென்றுவிட்டாராம். இதனால் மனமுடைந்த காயத்ரி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த மண்ணச்சநல்லூா் போலீஸாா் சடலத்தை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.