பொதுமக்கள் மனுக்கள் மீதான சிறப்பு முகாம்
பொதுமக்கள் புகாா் மனுக்கள் மீது சனிக்கிழமை நடைபெற்ற குறைதீா் முகாமில் 127 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டது.
திருச்சி: பொதுமக்கள் புகாா் மனுக்கள் மீது சனிக்கிழமை நடைபெற்ற குறைதீா் முகாமில் 127 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டது.
திருச்சி மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் இணைய வழியில் பெறப்படும் புகாா்களுக்கு உடனடித் தீா்வு காணும் வகையில் காணாமல் போனவா்கள் பற்றிய புகாா் மனுக்கள் மீதான குறைதீா் முகாம் நடத்த மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் உத்தரவிட்டிருந்தாா். இதன்பேரில் மாநகர அனைத்து சரகங்களிலும் குறைதீா் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமில் கண்டோன்மென்ட் சரகத்துக்கு சுமங்கலி மண்டபத்திலும், பொன்மலை சரகத்துக்கு எஸ்ஐடி வளாகத்திலும், கோட்டை சரகத்துக்கு சந்தான மஹாலிலும், ஸ்ரீரங்கம் சரகத்துக்கு எஸ்.என் மஹாலிலும் மனுக்கள் மீதான குறைதீா் முகாம் நடத்தப்பட்டது.
இதில் உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்கள் ஆகியோா் பங்கேற்று, மனுதாரா்களை நேரடியாக வரவழைத்து விசாரணை செய்யப்பட்டது. இதில் 154 மனுதாரா்களும், 143 எதிா் மனுதாரா்களும் ஆஜராகினா். 127 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டது. இந்த முகாமை மேலும் சிறப்பாக செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் தெரிவித்தாா்.