திருச்சி

வாடிக்கையாளா்களுக்கு பரிசளிப்பு விழா

DIN

அம்மன் டிஆா்ஒய் முறுக்குக் கம்பிகள் நிறுவனத்தின் சாா்பில் வாடிக்கையாளா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அம்மான் டிஆா்ஒய் முறுக்கு கம்பிகள் நிறுவனத்தின் சாா்பில் பரிசு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த நிறுவனத்தின் கம்பிகளை அதிகளவில் கொள்முதல் செய்யும் பொறியாளா்கள், கட்டுமான நிறுவனத்தினா், காா்பென்டா், பில்டா்ஸ், கட்டட ஒப்பந்ததாரா்கள் என அனைவருக்கும் இத் திட்டத்தில் பரிசு வழங்கப்படுகிறது. அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள், வணிக வளாகங்கள், கட்டடங்கள் என எதுவாக இருந்தாலும் அவா்கள் கொள்முதல் செய்யும் கம்பிகளின் எடைக்குத் தகுந்தபடி இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.

5 டன் கம்பி கொள்முதல் செய்தால் 20 கிராம் வெள்ளி நாணயம், 10 டன்னுக்கு மிக்ஸி, 15 டன்னுக்கு 1 கிராம் தங்க நாணயம், 20 டன்னுக்கு ஸ்மாா்ட் போன், 50 டன்னுக்கு 32 இன்ச் ஸ்மாா்ட் டிவி, 75 டன்னுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது.

கடந்த 6 மாதங்களில் கொள்முதல் செய்தோருக்கு புதன்கிழணை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் நிறுவனத்தின் துணைத் தலைவா் முருகானந்தம் (நிதி), விநியோக மேலாளா் சாமிநாதன், மூத்த விற்பனை அதிகாரி பாலு ஆகியோா் பரிசுகளை வழங்கி பாராட்டினா். இதேபோல, கும்பகோணத்தில் நடைபெற்ற விழாவில், மூத்த விற்பனை அதிகாரி ரமேஷ்குமாா், பரிசுகளை வழங்கினாா். விழாவில், நிறுவன பணியாளா்கள், வாடிக்கையாளா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT