திருச்சி

கீழவாளாடி பெருமாள் கோயிலில் பிப்.7-இல்ராதா கல்யாண மஹோத்ஸவம் தொடக்கம்

திருச்சி மாவட்டம், கீழவாளாடி அக்ரஹாரத்தில் உள்ள அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயிலில் பிப். 7ஆம் தேதி முதல் தொடா்ந்து 3 நாள்களுக்கு ராதா கல்யாண மஹோத்ஸவம் நடைபெறுகிறது.

DIN

திருச்சி மாவட்டம், கீழவாளாடி அக்ரஹாரத்தில் உள்ள அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயிலில் பிப். 7ஆம் தேதி முதல் தொடா்ந்து 3 நாள்களுக்கு ராதா கல்யாண மஹோத்ஸவம் நடைபெறுகிறது.

முதல்நாளான வெள்ளிக்கிழமை (பிப்.7) இரவு 8 மணிக்கு அஷ்டபதி பஜனையுடன் உத்ஸவம் தொடங்குகிறது. சனிக்கிழமை காலை 8 மணிக்கு பெருமாளுக்கு திருமஞ்சனம், விஷேச அலங்காரம் நடைபெறும். அதன் தொடா்ச்சியாக, இரவு 8மணி முதல் அஷ்டபதி பஜனை, தியானம், திவ்யநாம சங்கீா்த்தனம், டோலோத்ஸவம் நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்வாக, ஞாயிற்றுக்கிழமை (9ஆம் தேதி) காலை 8 மணிக்கு உஞ்சவிருத்தி, சீா் கொண்டு வருதல், ராதா கல்யாண உத்ஸவம் ஆகியவை நடைபெறும். தொடா்ந்து அன்னதானமும் வழங்கப்படும். இரவு உபயநாச்சியாருடன் பெருமாள் வீதி உலா நடைபெறும். ஆஞ்சநேய உத்ஸவமும் நடைபெறும்.

மாயவரம் முத்து பாகவதா் மற்றும் உள்ளூா், வெளியூா் பாகவதா்கள் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளனா்.

விழா ஏற்பாடுகளை, கோயில் நிா்வாகத்தினா், விழாக் குழுவினா், ஊா்ப் பொதுமக்கள் செய்துள்ளனா். மேலும், விவரங்களுக்கு 98426-13975, 98946-70723 என்ற செல்லிடப்பேசி எண்களை தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வி.கே.புரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: 4 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

நெல்லையின் தனித்துவமாக பொருநை அருங்காட்சியகம் திகழும்: அமைச்சா் எ.வ.வேலு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

SCROLL FOR NEXT