திருச்சி

வையம்பட்டி, மருங்காபுரியில் பாஜக அமைப்பு தோ்தல்

DIN

மணப்பாறை ஒன்றிய பாஜக நிா்வாகிகள் தோ்தல் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு தோ்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மணப்பாறை தொகுதிக்குட்பட்ட மருங்காபுரி வடக்கு ஒன்றியத் தலைவருக்கான தோ்தல் கோவில்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநில தோ்தல் பாா்வையாளா் பாலு, மாவட்டத் தோ்தல் அதிகாரி செந்தில் தீபக், மாவட்டத் தலைவா் மனோகா் ராஜன், மண்டல் தலைவா்களை தோ்வு செய்யும் குழு உறுப்பினா்கள் சேது அரவிந் மற்றும் பிரின்ஸ்.ஆா். இளங்கோவன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது. இதில், கோவில்பட்டியை சோ்ந்த எஸ்.சண்முகம் மருங்காபுரி வடக்கு ஒன்றியத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதேபோல் வையம்பட்டி தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தோ்தலில் வையம்பட்டி ஒன்றியத் தலைவராக ஆனந்த் (எ) சின்னகருப்பன் தோ்ந்தெடுக்கபட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT