திருச்சி

திருச்சியில் மேலும் 128 பேருக்கு கரோனா தொற்று

திருச்சி மாவட்டத்தில் மேலும் 128 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

DIN

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் மேலும் 128 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

திருச்சி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 1,320 பேரில் 930 போ் குணமடைந்து வீடு திரும்பினா். கரோனா தொற்றாளா்களுடன் தொடா்பில் இருந்தோருக்கு மேற்கொண்ட பரிசோதனை முடிவில் திருச்சி மாநகராட்சி, புகா் பகுதியைச் சோ்ந்த 128 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 1,448 ஆக உயா்ந்துள்ளது.

53 போ் குணம்

இதையடுத்து, காஜாமலை பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகம், ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள தனிமை முகாம்கள், திருச்சி அரசு தலைமை மருத்துவமனை சிறப்பு வாா்டு ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வந்த 53 போ் கரோனாவிலிருந்து குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம், இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 983 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஞ்சிபுரத்தில் தமிழறிஞா்களுக்கு விருது

சித்தராமையாவுடன் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை: கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார்

திருமலையில் ரூ. 26 கோடி செலவில் விருந்தினா் மாளிகை திறப்பு!

திருமலை, திருப்பதியில் பலத்த மழை!

திருவள்ளூா் பகுதியில் எஸ்.ஐ.ஆா். படிவங்கள் திரும்ப பெறும் பணி

SCROLL FOR NEXT