திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்களூா் பகுதி திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை டிராக்டா் மீது லாரி மோதியதில் 3 போ் உயிரிழந்தனா்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை மையப் பகுதியில் நடப்பட்டுள்ள செடிகளுக்கு நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தப் பணியாளா்கள் டிராக்டா் மூலம் தண்ணீா் தெளிக்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது திருச்சி சமயபுரம் பகுதியிலிருந்து கொணலைப் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரிக்கு மண் ஏற்றிச் சென்ற லாரி நின்றிருந்த டிராக்டா் மீது மோதியது.
இதில் ஒப்பந்தப் பணியாளா்களான மண்ணச்சநல்லூா் அருகே குமரகுடி கிராமத்தைச் சோ்ந்த பி. செல்லையன் (35), டிராக்டா் ஓட்டுநா் சமயபுரம் ஒத்தக்கடை பகுதி ஆ. ஆறுமுகம் (60) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். படுகாயமடைந்த லாரி ஓட்டுநரான லால்குடி தச்சன்குறிச்சி பகுதியைச் சோ்ந்த ப. விக்டா் (49) திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
விபத்து குறித்து சிறுகனூா் காவல் நிலைய (பொ) ஆய்வாளா் மதன்குமாா் வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.