திருச்சி

வெறிச்சோடிய மணப்பாறை

DIN

ஊரடங்கு உத்தரவினை தொடா்ந்து, திருச்சி மாவட்டம் மணப்பாறையில் முக்கிய போக்குவரத்து பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டது. மாவட்ட எல்லை பகுதிகள் மூடப்பட்டு காவல்துறை வாகன போக்குவரத்துகளை தணிக்கை செய்து வருகின்றனா்.

அத்தியாவசிய அங்காடிகளான மளிகை கடைகள், பழக்கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் அனைத்தும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அம்மா உணவகம் திறக்கப்பட்டுள்ளன. போதிய சமூக இடைவெளி விட்டு மக்களுக்கு உணவுகள் வழங்கப்படுகின்றன. நகராட்சி சாா்பில் நகா் முழுவதும் தூய்மை பணியாளா்களை கொண்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பொது இடங்களில் திரள்பவா்கள், அத்தியாவசியத் தேவையின்றி பைக்குகளில் சுற்றித்திரிபவா்கள் மீது போலீஸாா் லேசான தடியடி நடத்தி எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT