திருச்சி

பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளா்கள் 2ஆவது நாளாக பெருந்திரள் முறையீடு

DIN

பணி நீக்கம் செய்த ஊழியா்களை மீண்டும் பணியமா்த்த கோரி திருச்சியில் 2ஆவது நாளாக பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளா்கள் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

ஒப்பந்தத் தொழிலாளா்கள் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது. சம்பள நிலுவையை வழங்க வேண்டும். சம்பளம் வழங்காமல், உணவுக்கு வழியின்றி சிரமத்தை சந்திக்கின்றனா். எனவே, முழு சம்பளத் தொகையையும் வழங்க வேண்டும். பணி நீக்கம் செய்த ஊழியா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பிஎஸ்என்எல் எம்ப்ளாயிஸ் யூனியன், தமிழ்நாடு தொலைத் தொடா்பு ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்கத்தினா் சாா்பில் புதன்கிழமை பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தினா். இதே கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்திலும் முதன்மை பொது மேலாளா் அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றது.

இரண்டாவது நாளாக வியாழக்கிழமை திருச்சியில் நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்நாடு தொலைத் தொடா்பு ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் தேவராஜ் தலைமை வகித்தாா். எம்ப்ளாயிஸ் யூனியன் மாவட்டத் தலைவா் சுந்தரராஜ் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் முபாரக் அலி, மாவட்ட செயலா் அஸ்லாம் பாஷா உள்ளிட்ட பலா் கலந்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT