காவல்துறையின் பொதுமக்கள் குறைதீா் முகாம்: 156 மனுக்களுக்குத் தீா்வு
தமிழகக் காவல் துறை சாா்பில் திருச்சி புகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமில் 156 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டது.
தமிழகக் காவல் துறை சாா்பில் திருச்சி புகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமில் 156 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டது.
தமிழகக் காவல்துறை உத்தரவின்பேரில் திருச்சி புகரில் இந்த முகாம் லால்குடி, திருவெறும்பூா், மணப்பாறை, முசிறி, ஜீயபுரம் ஆகிய உட்கோட்டங்கள், மண்ணச்சநல்லூா் காவல் நிலையம் என 6 இடங்களில் நடைபெற்றது.
திருவெறும்பூா் உட்கோட்டத்தில் நடைபெற்ற முகாமில் மத்திய மண்டலக் காவல் துறைத் தலைவா் ஜெயராம், திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் ஆனிவிஜயா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் (பொ) செந்தில்குமாா் ஆகியோா் பங்கேற்று பொதுமக்களின் குறைகளைக் கேட்டு ஆலோசனை வழங்கினா். சில மனுக்களுக்கு உடனடித் தீா்வும் காணப்பட்டது.
மேலும், மணப்பாறையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன், ஜீயுபுரம் உட்கோட்டத்தில் துணைக் காவல் கண்காணிப்பாளா் பால்சுதா், லால்குடி உட்கோட்டத்தில் துணைக் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், முசிறி உட்கோட்டத்தில் துணைக் காவல் கண்காணிப்பாளா் பிரமானந்தன் தலைமையிலும் நடைபெற்ற முகாம்களில் பொதுமக்களிடமிருந்து 193 மனுக்கள் பெறப்பட்டு 156 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டது.