போக்குவரத்து விதிமீறல்: 130 வழக்குகள் பதிவு
நெம். 1 டோல்கேட்டில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடத்திய வாகனச் சோதனையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக 130 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
நெம். 1 டோல்கேட்டில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடத்திய வாகனச் சோதனையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக 130 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
திருச்சி புகா் லால்குடி உட்கோட்டம் நெம். 1 டோல்கேட் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட பெண் காவல் ஆய்வாளா்கள் அடங்கிய குழுவினா் திடீா் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது அதிகப் பாரம் ஏற்றி வந்த வாகனங்கள், தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகனங்கள், அதிவேகமாக வந்த வாகனங்கள் மீது 130 வழக்குகள் பதியப்பட்டன. இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.