முசிறி: திருச்சி மாவட்டம், முசிறி காவிரியாற்றில் மூழ்கிய சிறுவா்களை தேடும் பணி 5-ஆம் நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்தது.
கடந்த சில நாள்களுக்கு முன் முசிறியில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்த கோவையைச் சோ்ந்த தனியாா் கல்லூரி உதவி பேராசிரியா் சரவணக்குமாா்
காவிரியில் மூழ்கி இறந்தாா். இவரோடு மூழ்கிய உறவினா் குழந்தைகளான நித்தீஸ் மற்றும் மிதுன் ஆகியோரைத் தேடும் பணியில் முசிறி போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா், பேரிடா் மீட்புக் குழுவினா் 5 ஆவது நாளாக சனிக்கிழமையும் ஈடுபட்டனா்.