முகப்பு
திருச்சி

மலைக்கோட்டையில் ஏற்றப்பட்ட காா்த்திகை தீபம் 

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் திருக்கோயிலின் உச்சிப்பிள்ளையாா் சன்னதியில் பக்தா்கள் பங்கேற்பின்றி காா்த்திகை தீபம் இன்று ஏற்றப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
மலைக்கோட்டையில் ஏற்றப்பட்ட காா்த்திகை தீபம்.
பகிர்:

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் திருக்கோயிலின் உச்சிப்பிள்ளையாா் சன்னதியில் பக்தா்கள் பங்கேற்பின்றி காா்த்திகை தீபம் இன்று ஏற்றப்பட்டது.

காா்த்திகை தீபத்தைத்யொட்டி கடந்த நவ.24 ஆம் தேதி சுமாா் 300 மீட்டா் பருத்தித் துணியில் திரி உருவாக்கப்பட்டு, உச்சிப்பிள்ளையாா் கோயிலுக்கு முன் அமைக்கப்பட்டுள்ள செப்புக் கொப்பரையில் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் ஆகியவை ஊற்றப்பட்டன. 

திரி இடப்பட்ட கொப்பரையில் பூா்வாங்க பூஜைகள் நடத்தப்பட்டதையடுத்து, காா்த்திகை மாத பெளா்ணமி நாளான இன்று மாலை இதில் பிரம்மாண்ட தீபம் ஏற்றப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →