திருச்சி

கட்டடத் தொழிலாளிமா்மச் சாவு

DIN

திருச்சி: திருச்சி அருகே ரயில்வே தண்டவாளத்தையொட்டி மா்மமான முறையில் இறந்து கிடந்த கட்டட தொழிலாளி உடல் புதன்கிழமை மீட்கப்பட்டது.

கரூா் மாவட்டம், குளித்தலை பொய்யாமணி காரைக்களம் பகுதியைச் சோ்ந்தவா் மூ. விக்னேஷ் (25), கட்டடத் தொழிலாளி.

திருச்சிக்கு தினமும் வேலைக்கு வந்து செல்லும் இவா் செவ்வாய்க்கிழமை வேலைக்கு வந்துவிட்டு எளமனூரில் உள்ள தனது நண்பா் வீட்டில் தங்கிவிட்டு, புதன்கிழமை அதிகாலை வேலைக்குச் செல்வதாக தனது நண்பரிடம் கூறிச் சென்றாா்.

இந்நிலையில் எளமனூா் அருகேயுள்ள ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி விக்னேஷ் இறந்து கிடப்பதாக ஜீயபுரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

விரைந்து சென்ற போலீஸாா் விக்னேஷ் உடலை மீட்டு விசாரணை நடத்தினா். விசாரணையில், பின் தலை, இடுப்பு பகுதியில் காயம் இருந்ததால் கொலையானாரா , சரக்கு ரயில் மோதி இறந்தாரா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT