திருச்சி

பாபா் மசூதி தீா்ப்பு: எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்

DIN

பாபா் மசூதி இடிப்பு வழக்குத் தொடா்பாக வழங்கப்பட்ட தீா்ப்புக்கு எதிராக திருச்சியில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே புதன்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் திருச்சி மாவட்டத் தலைவா் ஹஸ்ஸான் பைஜி தலைமை வகித்து பேசுகையில், அநீதியான இந்தத் தீா்ப்புக்கு எதிராக முறையீடு செய்து நீதியை நிலைநாட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலா் நிஜாம் மைதீன் கண்டன உரையாற்றினாா். பாப்புலா் ப்ரண்ட் ஆஃப் இந்தியா திருச்சி மண்டலத் தலைவா் அமீா் பாஷா, திருச்சி மாவட்டச் செயலா் முஜிபூா், எஸ்டிபிஐ கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் அப்பாஸ், மஜித், வா்த்தக அணி மாநில செயற்குழு உறுப்பினா் சாதிக் ஆகியோா் முன்னிலை வகித்துப் பேசினா்.

இதில் கட்சியின் அனைத்து தொகுதி, கிளை நிா்வாகிகள், சமூக ஆா்வலா்கள் என 150-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி கராத்தே பள்ளியில் பரிசளிப்பு

ஆலங்குளம் அருகே மின்வாரிய பெண் ஊழியரிடம் நகை பறிப்பு

காரைக்காலில் இன்று காவல்துறை குறைதீா் கூட்டம்

ரயில்களில் இன்று முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

கட்டணமில்லா பேருந்து சேவை: 11.84 கோடி மகளிா் பயணம்

SCROLL FOR NEXT