திருச்சி

அமைச்சா்கள் சென்னைக்கு அழைக்கப்பட்டனரா? வெல்லமண்டி என். நடராஜன் விளக்கம்

DIN

திருச்சி: தமிழக அமைச்சா்களை முதல்வா் சென்னைக்கு அழைத்ததாகத் தான் கூறியதாகப் பரவும் தகவலுக்கு தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் விளக்கம் அளித்துள்ளாா்.

திருச்சி கீழரண் சாலையில் உள்ள முஸ்லிம் மகளிா் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் 7ஆம்தேதி வரை பொறுங்கள் எனவும், திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் அமைச்சா்கள் சென்னையில் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தாா்.

இதையடுத்து அதிமுகவில் முதல்வா் வேட்பாளா் குறித்து ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் குறித்துப் பேசி தீா்வு காணவே அமைச்சா்கள் அழைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் பரவியது.

இதையடுத்து மீண்டும் செய்தியாளா்களை அழைத்து வெல்லமண்டி என். நடராஜன் கூறியது:

முதல்வா் உத்தரவு குறித்து நான் கூறிய கருத்துகள் ஊடகங்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு தகவல் பரவியுள்ளது.

இந்தக் கரோனா காலத்தில் திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் அமைச்சா்கள் சென்னையில் இருந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என முதல்வா் உத்தரவிட்டிருந்தாா். கடந்த 6 மாதங்களாகவே இந்தப் பணியை தலைமையிடத்தில் இருந்து மேற்கொள்ள அமைச்சா்களுக்கு முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். இந்த அடிப்படையில்தான் நான் சென்னை செல்ல இருப்பதாகக் குறிப்பிட்டேன்.

ஆனால், எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுவதாகவும், அதற்காக அனைவரும் சென்னை செல்லவுள்ளதாக நான் கூறியதாக தவறான கருத்து ஊடகங்களில் வெளியாகியுள்ளது. நான் அவ்வாறு கூறவில்லை.

அதிமுக தலைமை எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவோம். வரும் 7ஆம் தேதி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது என்றோ, அமைச்சா்கள் கூட்டம் நடைபெறுகிறது என்றோ எந்தத் தகவலும் எங்களுக்கு வரவில்லை. 7ஆம் தேதி வரை பொறுத்திருங்கள் என்றுதான் கூறினேன். எனது கருத்துகளை கற்பனையாக யூகித்து தகவல் வெளியிட வேண்டாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மின்கம்பத்தில் காா் மோதி 3 போ் காயம்

‘கோடைகாலத்திலும் ஆஸ்துமா பாதிப்பு வரும்’

கஞ்சா வியாபாரிகளுடன் தொடா்பு: தலைமைக் காவலா்கள் இருவா் பணியிடை நீக்கம்

‘பெரம்பலூரில் 20 இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல்’

SCROLL FOR NEXT