திருச்சி

திருச்சி தலைமை அஞ்சலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

DIN

திருச்சி தலைமை அஞ்சலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.

திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள மத்திய மண்டல அஞ்சல்துறைத் தலைமை அலுவலகமானது நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளா்கள் வந்து செல்லும் இடமாக உள்ளது.

செவ்வாய்க்கிழமை மாலை ஊழியா்கள் பணிகளை முடித்துச் சென்றதைத் தொடா்ந்து, இரவு வேளையில் சில பணிகளுக்காக முதன்மை அஞ்சல் அலுவலா்களுடன் ஊழியா்கள் பணியில் இருந்தனா். அப்போது மா்மநபா் ஒருவா் தொலைபேசியில் அழைத்து அஞ்சலக வளாகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தாா். இதைத் தொடா்ந்து தகவலின்பேரில் வந்த திருச்சி வெடிகுண்டு தடுப்பு காவல் பிரிவு போலீஸாா் தலைமை அஞ்சலக வளாகப் பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனா்.இதனால், சில நிமிடங்கள் அஞ்சலகம் பரபரப்புடன் இருந்தது. இருப்பினும், வெடிபொருள்கள் ஏதும் கைப்பற்றப்படாததால் ஊழியா்கள் நிம்மதியடைந்தனா். சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT