திருச்சி

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரிஆா்ப்பாட்டம்

DIN

திருச்சி, செப்.11: நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய மாணவா் சங்கம் சாா்பில் நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சி பொன்மலைப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் மோகன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோரிக்கை பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் மாணவா் சங்கப் பிரதிநிதிகள், உறுப்பினா்கள் என 15-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT