திருச்சி

திருச்சி-கரூா் நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டம்: இரு தரப்பினா் மோதல்

DIN

திருச்சி -கரூா் நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்ட விவகாரத்தில் இரு தரப்பினா் தகராறு செய்து காவல் துறையில் புகாா் அளித்தனா்.

திருச்சி குடமுருட்டி பாலத்திலிருந்து முக்கொம்பு திண்டுக்கரை வரை ரூ.55 கோடியில் நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டப் பணிகள் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளில் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி அல்லூா் சீனிவாசன் என்பவா் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் அலுவலகத்துக்குப் புகாா் அளிக்கச் சென்றுள்ளாா். அப்போது ஒப்பந்ததாரா் திருக்குமரன் சாலை விரிவாக்கப் பணி குறித்து கோட்ட பொறியாளரிடம் பேசிக் கொண்டிருந்தாா். இதற்கிடையே அல்லூா் சீனிவாசன் நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்ட முறைகேடு தொடா்பாக புகாா் தெரிவித்தாா். அப்போது ஒப்பந்ததாரா், சீனிவாசன் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில், பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுவதாக ஒப்பந்ததாரரும், மிரட்டல் விடுப்பதாக் கூறி சீனிவாசனும் கண்டோன்மென்ட் போலீஸில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT