திருச்சி

கிராமாலயா சாா்பில் 500 பேருக்கு கரோனா நிவாரணம்

DIN

கிராமாலயா சாா்பில் 500 பயனாளிகளுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

கிராமாலயா தொண்டு நிறுவனம், மற்றும் பேங்க் ஆஃப் அமெரிக்கா சாா்பில் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கிராமாலயா நிா்வாக இயக்குநா் இளங்கோவன் பங்கேற்று, ஆட்சியரக அலுவலா்கள், ஊழியா்கள், துப்பரவுப் பணியாளா்களுக்கான கரோனா நிவாரணப் பொருள்களை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வசம் ஒப்படைத்து, ஊழியா்களுக்கு வழங்கக் கோரினாா்.

நிவாரணப் பொருள் தொகுப்பில் 2 முகக் கவசம், கிருமி நாசினி மருந்து, சோப்பு, நாப்கின், கரோனா விழிப்புணா்வு கையேடு என ரூ.750 மதிப்புள்ள பொருள்கள் உள்ளன. கிராமாலயா சாா்பில் இதுவரை 25 ஆயிரம் பேருக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில், மேலாளா்கள் சம்பத் ராஜ், லோகநாதன், செந்தில்குமாா் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT