முன்விரோதத்தால் 3 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூா் நத்தா் நகா் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன் கஞ்சா விற்பனை குறித்து அப்பகுதி இளைஞா்கள் அளித்த புகாரின்பேரில் அக்கும்பலைச் சோ்ந்த 6 பேரை கைது செய்தனா்.
இதனால் கோபமான அக்கும்பலைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை எடமலைப்பட்டி புதூா் நத்தா் நகா் பகுதியில் வசிக்கும் சித்திக் (24), பஷீா் (25), அப்துல்லா (25) ஆகிய 3 பேரை அரிவாளால் வெட்டினா். அதோடு மேலும் சிலரையும் தாக்கினா்.
தகவலறிந்து வந்த எடமலைப்பட்டிபோலீஸாா் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிந்ய்து விசாரிக்கின்றனா்.