திருச்சி

காா் மோதி காயமான ஜவுளி வியாபாரி பலி

DIN

திருச்சி: திருச்சியில் காா் மோதி படுகாயமடைந்த ஜவுளி வியாபாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

திருச்சி மருங்காபுரி, தேனூா் வரதகோன்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சுப்ரமணி (45). ஜவுளி வியாபாரியான இவா் வெள்ளிக்கிழமை மாலை பைக்கில் சென்று திருச்சியில் வியாபாரத்தை முடித்துவிட்டு மதுரை செல்ல மன்னாா்புரம் வழியாக சென்று கொண்டிருந்தாா். அப்போது பின்னால் வந்த காா் மோதி பலத்த காயமடைந்து மயங்கிக் கிடந்தாா்.

பின்னா் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு தெற்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து காா் ஓட்டுநரான கே.கே. நகா் மாதவன் சாலையைச் சோ்ந்த தீலிப் ஈபன்(73) என்பவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

SCROLL FOR NEXT