திருச்சி: வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக் திருட்டு
திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் அருகேயுள்ள சாலியாசந்து பகுதியில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் அருகேயுள்ள சாலியாசந்து பகுதியில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் அருகேயுள்ள சாலியாசந்து பகுதியில் வசிப்பவா் கோ. நல்லதம்பி (52), புளி வியாபாரி.
வீட்டின் மேல் மாடியில் வசிக்கும் இவா் ஞாயிற்றுக்கிழமை காலை பாா்த்தபோது ஜன்னலோரம் மேஜையில் இருந்த 2 செல்லிடப்பேசிகள் மற்றும் வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த பைக் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.
இவா் அளித்த புகாரின்பேரில் மணப்பாறை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.