முகப்பு
திருச்சி

தூங்கும்போது ஆற்றில் தவறி விழுந்தவா் பலி

திருச்சியில் தூங்கும்போது காவிரியாற்றில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

திருச்சியில் தூங்கும்போது காவிரியாற்றில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

திருச்சி வடக்கு புலிவலத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (38). கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி ரேணுகா, 2 குழந்தைகள் உள்ளன.

வேலை முடிந்தபின் ஆறுமுகம் இரவு வீட்டுக்கு வராமல் மது அருந்திவிட்டு வெளியில் தங்கி விடுவாராம். வழக்கம் போல மதுஅருந்திவிட்டு அயிலாப்பேட்டை உபரிநீா் வாய்க்கால் காவிரியாற்றுப் பாலத்தையொட்டி தூங்கிக் கொண்டிருந்த ஆறுமுகம் காவிரியாற்றில் தவறி விழுந்து மூழ்கினாா்.

தகவலறிந்த தீயணைப்புத் துறை, போலீஸாா் சம்பவ இடத்துக்கு ஆறுமுகத்தை சடலமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினா். ஜீயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →